தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்த ‛படை தலைவன்' படத்தில் அவருக்கு ஹீரோயின் இல்லை. யானையை தேடி செல்லும் கதை என்பதால் ஹீரோயின் தேவையில்லை என நினைத்து விட்டார் இயக்குனர். சரி, அடுத்து என்ன படத்தில் நடிக்குறீங்க அதில் ஹீரோயின் உண்டா என்றால் சண்முகபாண்டியன் சிரிக்கிறார்.
‛‛அடுத்து பொன்ராம் இயக்கும் கொம்பு சீவி படத்தில் நடிக்கிறேன். அது அவர் ஸ்டைல் பக்கா கமர்ஷியல் கதை. காதல், காமெடி இருக்கிறது. ஹீரோயினும் இருக்கிறார்'' என்கிறார். அந்த படம் 1990களில் நடக்கும் கதையாம். அதில் ஹீரோயினாக தர்ணிகா நடிக்கிறார். அவருக்கு போலீஸ் கேரக்டர் என்று கூறப்படுகிறது. இவர் முன்னாள் நடிகை ஒருவரின் மகள் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த படத்தில் சரத்குமார் முக்கியமான கேரக்டரில் வருகிறார். ஒரு உண்மை சம்பவத்தை தழுவி இந்த கதையை எடுக்கிறாராம் பொன்ராம். 10 ஆண்டுகளுக்கு முன்பு ‛சகாப்தம்' என்ற படத்தில் நடித்தார் சண்முகபாண்டியன். அதில் ஹீரோயினாக நேஹா நடித்தார். அவர் எப்படி இருப்பார் என்பதையே தமிழ் சினிமா மறந்துவிட்டது.