தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சினிமா பிரபலங்களாக இருந்தாலும் அவர்கள் அனைவருமே கிரிக்கெட் வீரர்களுக்கு ரசிகர்களாக இருப்பதை ஒவ்வொரு விளையாட்டுப் போட்டியின் போதும் ஸ்டேடியத்தில் பார்க்க முடியும். அந்த வகையில் நடிகை நவ்யா நாயர் தனது பேவரைட் கிரிக்கெட் வீரரான இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலியை சமீபத்தில் லண்டனில் சந்தித்துள்ளார்.
தமிழில் 'அழகிய தீயே, ராமன் தேடிய சீதை, மாயக்கண்ணாடி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலான இவர் நடன பயிற்சி பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் லண்டனுக்கு சுற்றுலா சென்றிருந்த நவ்யா நாயர் அங்கே, தான் ஆராதிக்கும் கிரிக்கெட் ஜாம்பவானாக கங்குலியை நேரில் சந்திக்கும் வாய்ப்பை பெற்றார்.
அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள நவ்யா நாயர், “என்னுடைய லண்டன் சுற்றுப்பயணத்தில் ஒன் அண்ட் ஒன்லி சவுரவ் கங்குலியை சந்தித்தது இன்னும் ஒரு கனவு போலவே இருக்கிறது. ஒரு பள்ளி மாணவியாக தொலைக்காட்சியில் பெங்கால் தாதா விளையாடியதைப் பார்த்து கொண்டாடிய எனக்கு இன்று அவரை நேரில் சந்திக்கும் இந்த தருணம் என்றென்றும் நினைவில் இருந்து அகலாது” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.