சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
மலையாளத்தில் பத்து வருடங்களுக்கு முன்பு மிகப்பெரிய வெற்றி பெற்ற பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். அதைத்தொடர்ந்து இவருக்கு தமிழில், அதைவிட அதிகமாக தெலுங்கில் நிறைய பட வாய்ப்புகள் தேடி வந்தன. தற்போது தெலுங்கு படங்களில் தான் அவர் அதிக அளவில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சுரேஷ் கோபி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ஜேஎஸ்கே ( ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா ) என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய அனுபமா பரமேஸ்வரன், “மலையாள திரையுலகில் என்னை வேண்டுமென்றே சிலர் ஒதுக்கி வைக்கிறார்கள். எனக்கு நடிப்பு வரவில்லை என்று அவர்கள் காரணம் சொல்கிறார்கள். இதனால் நிறைய டிரோல்களை நான் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. நீங்கள் விரும்பினால் டிரோல் பண்ணுங்கள், ஆனால் கொல்லாதீர்கள்” என்று உருக்கமுடன் பேசினார்.
இதனைத் தொடர்ந்து அனுபமாவை சமாதானப்படுத்தும் விதமாக பேசிய நடிகர் சுரேஷ் கோபி, “ஒரு உண்மை தெரியுமா? சிம்ரன் வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவரை மலையாள திரையுலகம் கண்டுகொள்ளாமல் ஒதுக்கியது. ஆனால் அதன்பிறகு, எவ்வளவு பெரிய இயக்குனர்கள் சிம்ரனை தங்கள் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க அவர் பின்னால் ஓடினார்கள் என்று எனக்கே தெரியும், சிம்ரன் மட்டுமல்ல அசின், நயன்தாரா எல்லோருமே இதுபோன்று பிரச்சனைகளை, சங்கடங்களை சந்தித்து அதன்பிறகு மற்ற பல்வேறு மொழிகளில் பிரபலமானார்கள், அதேபோல உன்னுடைய வாழ்க்கையிலும் நடக்கும் அனுபமா, இதைத்தான் கர்மா என்கிறோம், நிச்சயமாக இது நடக்கும், என்னுடைய பிரார்த்தனை எப்போதும் உனக்கு உண்டு” என்றார்.