தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

'வாத்தி' படத்தை அடுத்து மீண்டும் தெலுங்கில் தனுஷ் நடித்துள்ள படம் 'குபேரா'. சேகர் கம்முலா இயக்கி உள்ள இந்த படத்தில் தனுசுடன் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். நாளை மறுநாள் இந்த படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் இந்த படம் குறித்து தனுஷ் பேசிய சில வீடியோக்களை படக்குழு வைரலாக்கி வருகிறது.
அதில், இந்த குபேரா படத்தில் தான் கமிட்டானது, நடித்தது குறித்து தனுஷ் கூறும்போது, ''தி கிரேமேன் என்ற ஹாலிவுட் படத்தில் நான் நடித்துக் கொண்டிருந்த போதுதான் வீடியோ காலில் வந்து இந்த குபேரா படத்தின் கதையை சொன்னார் சேகர் கம்முலா. அப்போது இந்த கதை எனக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக நாம் சேர்ந்து பண்ணுவோம் என்று கூறியிருந்தேன். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர் என்னை தொடர்பு கொண்டார். அப்போது கேட்டபோதும் படத்தின் கதை ஸ்கிரிப்ட் எல்லாமே ரொம்ப சிறப்பாக இருந்தது.
என்றாலும் இந்த படத்துக்காக திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் உட்கார வைத்து அம்மா தாயே என்று என்னை பிச்சை எடுக்க வைத்து விட்டார். ஆனால் அப்படி உச்சி வெயிலில் நடுரோட்டில் அமர்ந்து காசு கேட்டு கையை நீட்டி பிச்சை எடுத்த போதுதான் நாம் ஓடிக் கொண்டிருக்கும் ஓட்டம் எத்தனை அர்த்தமில்லாதது என்பதை நான் புரிந்து கொண்டேன்'' என்று பேசி உள்ளார் தனுஷ்.