கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

ஒரு படம் நன்றாக இருந்தால் அந்த படம் வெற்றி பெறும் என தெரிந்தால் அந்த படத்தை ரிலீசுக்கு சில நாட்களுக்கு முன்பே மீடியாவினர், சினிமாகாரர்களுக்கு அந்த படக்குழு போட்டு காண்பிக்கும். அந்தவகையில் ஒருநாள் கூத்து, மான்ஸ்டர், பர்ஹானா படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் அடுத்த படமான டிஎன்ஏ படத்தின் சிறப்பு காட்சி நேற்று சென்னையில் நடந்தது.
படம் முடிந்த பின் பேசிய ஹீரோ அதர்வா, படம் பார்த்தவர்கள் பாராட்டிக் கொண்டே இருக்கிறார்கள். அது நெகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு காரணமான இயக்குனர், ஹீரோயின் உள்ளிட்ட படக்குழுவுக்கு நன்றி. இந்த படத்தை புதிதாக திருமணம் ஆனவர்கள், குழந்தை பெற்றெடுத்தவர்களுக்கு அர்ப்பணிக்கிறோம். காரணம், படத்தின் கதை அப்படி என்றார்.
ஹீரோயின் நிமிஷா சஜயன் பேசுகையில் ''படத்தில் நான் நடித்த அம்மா பாசம் சீன், குழந்தை சீன்களுக்கு அவ்வளவு வரவேற்பு. இந்த படத்தின் கதை, கேரக்டர், எமோஷன் அனைவரையும் சென்றடைந்துள்ளது. மகிழ்ச்சி. படம் பார்த்தவர்கள் எனக்கு விருது கிடைக்கும் என்று சொல்கிறார்கள். கூடுதல் மகிழ்ச்சி. விருதும் கிடைக்க வேண்டும். தமிழில் அடுத்தடுத்த படங்களும் கிடைக்க வேண்டும்'' என்றார்.