வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

பொதுவாக, ராஜமவுலி படங்களில் இதிகாசங்கள், சனாதனம் டச் இருக்கும். அவர் படங்களில் இந்து கடவுள்கள், இந்து தர்மம் போற்றும் சீன்கள் இருக்கும். பாகுபலியில் சிவன் பாடல், ஆர்ஆர்ஆர் படத்தில் ராமர் சாயல் என பல விஷயங்களை சொல்லலாம். இப்போது மகேஷ்பாபு நடிக்கும் பெயரிடப்படாத படத்தை அவர் இயக்கி வருகிறார். படத்தில் பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா, மாதவன் உட்பட பலர் இருக்கிறார்கள்.
இந்த படத்தின் கதைப்படி உலகம் முழுக்க சென்று மூலிகை, வேர்களை தேடுபவராக ஹீரோ கேரக்டர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேரக்டர் அனுமனை நினைவுபடுத்துகிறது என்று கூறப்படுகிறது. ஒடிசாவில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், முக்கியமான போர்ஷனை வாரணாசி எனப்படும் காசியில் படமாக்க நினைத்தார் ராஜமவுலி. ஆனால், அங்கே படப்பிடிப்பு நடத்துவது கடினம் என்பதால், ஐதராபாத் பிலிம் சிட்டியில் அசல் காசி மாதிரியான செட்டை உருவாக்க சொல்லியிருக்கிறார். அந்த செட் 50 கோடியில் உருவாக்கப்படுகிறது. படத்தின் மிக முக்கியமான சீன்கள் அங்கே எடுக்கப்பட உள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு கென்யாவிலும் நடக்க உள்ளது என அந்த படக்குழு தெரிவிக்கிறது.




