சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
பாலிவுட்டில் முன்னாள் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் கரிஷ்மா கபூர். அவருக்கும் தொழிலதிபரான சஞ்சய் கபூருக்கும் திருமணம் நடந்து பின் விவாகரத்து பெற்றனர். கடந்த வாரம் இங்கிலாந்தில் போலோ விளையாடிய போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பில் சஞ்சய் மரணம் அடைந்தார். தேனீ ஒன்று அவருடைய வாய் வழியே மூச்சுக்குழாயில் புகுந்ததே மாரடைப்புக்குக் காரணம் என்று செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் சஞ்சய் கபூரின் உடல் டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டு அங்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது. தனது முன்னாள் கணவர் சஞ்சயின் உடலுக்கு தனது மகன், மகள், தங்கை கரினா கபூர், இவரது கணவர் நடிகர் சைப் அலிகான் ஆகியோருடன் சென்று கரிஷ்மா இறுதி அஞ்சலி செலுத்தினார்.
கரிஷ்மாவுக்கு முன்னதாகவே நந்திதா என்பவரைத் திருமணம் செய்து கொண்டு இரண்டே வருடங்களில் அவரைப் பிரிந்துள்ளார் சஞ்சய். கரிஷ்மாவுடன் 11 வருடங்கள் ஒன்றாக இருந்துள்ளார். பின்னர், மூன்றாவதாக வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு அவருடன் வசித்து வந்தார்.