தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

வடிவேலு, சிங்கமுத்து காமெடி ஒரு காலத்தில் ரசிக்கப்பட்டது. இப்போதும் அது கோல்டன் காமெடியாக உள்ளது. சிங்கமுத்து ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்ததால் வடிவேலுவுக்கு ஏராளமான சொத்துக்கள் வாங்கி கொடுத்தார். இதில் அவர் பல கோடி மோசடி செய்து விட்டதாக சிங்கமுத்து மீது வடிவேலு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் (பணமோசடி), சிங்கமுத்து தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, வடிவேலுவுக்கு சாதகமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சிங்கமுத்து மனு தாக்கல் செய்தார். அதில், எனக்கு 67 வயதாகி விட்டது. உடல் நல குறைவால் சிகிச்சை பெற்று வந்தேன். அதனால் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய முடியவில்லை. எனவே, ஒருதலைபட்சமான உத்தரவை நீக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தனது முந்தைய உத்தரவை நீக்கி, சிங்கமுத்துக்கு 2500 ரூபாய் அபராதம் விதித்து அதனை வடிவேலுவிடம் கொடுக்க உத்தரவிட்டது.