வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
கொக்கைன் என்ற போதை பொருளை பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்தை நேற்று (ஜூன் 23) நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தார்கள். அவருக்கு தான் கொக்கைன் கொடுத்ததாக பிரதீப் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு நடத்தப்பட்ட ரத்த மாதிரி சோதனையில் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரும் தான் செய்த தவறை ஒத்துக் கொண்டதோடு தனக்கு ஜாமின் கேட்டும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும், பிரசாத் என்ற அந்த நபர் நடிகர் ஸ்ரீகாந்த் மட்டுமின்றி நடிகர் கிருஷ்ணாவுக்கும் தான் கொக்கைன் கொடுத்ததாக தெரிவித்ததன் அடிப்படையில் தற்போது கேரளாவில் படப்பிடிப்பில் இருந்து வரும் நடிகர் கிருஷ்ணாவையும் தொடர்பு கொண்டு போலீசார் விசாரணை நடத்தியுள்ளார்கள். மேலும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அவரும் விரைவில் கைது செய்யப்படுவார் என்பது தெரிகிறது.