இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் |
துல்கர் சல்மான் நடித்த 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' என்ற படத்தை இயக்கியவர் தேசிங்கு பெரியசாமி. அதையடுத்து அவர் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்குவதாகவும் கூறப்பட்டது. ஆனால் பின்னர் சிம்பு நடிக்கும் ஐம்பதாவது படத்தை இயக்குவதற்கு கமிட்டானார். அந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் அந்நிறுவனம் வெளியேறியதை அடுத்து சிம்புவே அந்த படத்தை தயாரித்து நடிக்கப்போவதாகவும் கூறப்பட்டது. என்றாலும் தற்போது வரை அந்த படம் தொடங்கப்படவில்லை. அதோடு ஏற்கனவே மூன்று புதிய படங்களில் கமிட்டாகி இருந்த சிம்பு, தற்போது வெற்றிமாறன் இயக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த நேரத்தில் சிம்புவுக்கு இரண்டு ஆண்டுகளாக காத்திருந்த தேசிங்கு பெரியசாமி அடுத்தபடியாக 'ஜெய் பீம், குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன்' போன்ற படங்களில் நடித்த மணிகண்டனை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். இதன் காரணமாக சிம்புவின் ஐம்பதாவது படம் டிராப் செய்யப்பட்டதா? இல்லை தள்ளி வைக்கப்பட்டுள்ளதா? என்கிற கேள்விகள் எழுந்திருக்கிறது.