துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில், கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் இந்த மாதம் 5ம் தேதி வெளியான படம் தக் லைப். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான படம் பெரும் தோல்வியை சந்தித்தது.
பட வெளியீட்டிற்கு முன்பாக இந்தப் படத்தை 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளோம் என்று படக்குழுவினர் அறிவித்தார்கள். அதற்கு இந்திய மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் சங்கத்தினர் பாராட்டும் தெரிவித்தனர். பொதுவாக தமிழ்த் திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியான 4 வாரங்களில் ஓடிடியில் வெளியாவது வழக்கம். ஆனால், இந்த 'தக் லைப்' படம் மீது கொண்ட அதீத நம்பிக்கையில் படக்குழுவினர் 8 வாரங்கள் என்று அறிவித்தனர்.
இப்போது அது நடக்காமல் போய்விட்டதாகத் தகவல். 4 வாரங்களுக்குள் ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட படத்தை வாங்கிய ஓடிடி நிறுவனம் அழுத்தம் கொடுத்து வருகிறதாம். முதலில் பேசிய விலையை விட கால் பங்கு விலையைக் குறைக்கவும் செய்துள்ளார்களாம். பின்னர் ஒரு வழியாகப் பேசி ஒரு விலைக்குப் பேசி முடித்துள்ளார்கள். முன்பை விட 10 சதவீதம் மட்டுமே விலையக் குறைத்துள்ளார்களாம்.
இதனிடையே, 8 வாரங்களில் வெளியிடாமல் 4 வாரங்களில் வெளியிட்டால் அதற்காக ஒப்பந்தத்தை மீறிய வகையில் சுமார் 25 லட்சம் அபராதம் விதிக்க மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் சங்கம் முடிவு செய்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்லாது ஏற்பட்ட நஷ்டத்தையும் சரி செய்யக் கேட்டுள்ளார்களாம். அந்த பேச்சு வார்த்தைகளும் முடிந்த பின் ஓடிடி அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
அன்று பாராட்டுத் தெரிவித்து இன்று அபராதம் விதிக்க உள்ளார்கள் என்பதுதான் பாலிவுட்டிலும் பேச்சாக உள்ளதாம்.