தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

அமெரிக்காவில் அடுத்தாண்டு நடக்கும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்திய திரைத்துறையை சேர்ந்த நடிகர்கள் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா உள்ளிட்ட 534 கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உலகளவில் திரைத்துறைக்கு ஆஸ்கர் விருது கவுரவமாக பார்க்கப்படுகிறது. இதற்கு தனி மதிப்பும், மரியாதையும் உருவாகியிருக்கிறது. இந்தியா சார்பில் இதுவரை இசையமைப்பாளர்கள் ஏஆர் ரஹ்மான், கீரவாணி ஆகியோர் ஆஸ்கர் விருது வென்றுள்ளனர்.
இந்நிலையில் உலகளவில் திரைத்துறையில் சிறப்பாக பங்காற்றிய திரைக்கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருது நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து தமிழகத்தை சேர்ந்த நடிகர் கமல்ஹாசன், பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா, நடிகை கரண் மாலி, ஒளிப்பதிவாளர் ரன்வீர் தாஸ், ஆடை வடிவமைப்பாளர் மாக்சிமா பாசு, ஆவணப்பட தயாரிப்பாளர் ஸ்மிருதி முந்த்ரா மற்றும் திரைப்பட இயக்குனர் பாயல் கபாடியா ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர். கமல்ஹாசனுக்கு ஆஸ்கர் விருது வழங்கும் கீழ் அழைப்பு விடுத்துள்ளது.
98வது ஆஸ்கர் விருது விழா அடுத்தாண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் மார்ச் 15ல் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை கோனன் ஓ'பிரையன் தொகுத்து வழங்குவார். விருதுக்கான பரிந்துரைகள் ஜனவரி 22ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டு அழைக்கப்பட்ட குழுவில், 41% பேர் பெண்கள், 45% பேர் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள், மற்றும் 55% பேர் அமெரிக்காவுக்கு வெளியே உள்ள 60 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.
இந்த அழைப்புகளை ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே 2025ம் ஆண்டில் அகாடமியின் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள். இந்த நிலையில், சர்வதேச அளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்தும் விதமாக கமல்ஹாசன் மற்றும் ஆயுஷ்மான் குரானா ஆகியோர் ஆஸ்கர் அகாடமியில் சேர்வதற்கான அழைப்பை பெற்றுள்ளனர். இந்த புதிய உறுப்பினர்கள் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த மேலும் பல முக்கிய ஆளுமைகள் இடம் பிடித்துள்ளனர்.