கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதா ப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே ஆகியோர் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டு திரைக்கு வந்த படம் கல்கி 2898 ஏடி. இந்த படம் திரைக்கு வந்து தற்போது ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. அது குறித்த ஒரு போட்டோவை அப்படத்தை தயாரித்த வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதை மறுபதிவு செய்துள்ளார் நடிகர் அமிதாப்பச்சன். அதோடு ஒரு பதிவும் வெளியிட்டுள்ளார்.
அதில், இப்படி ஒரு சிறந்த படத்தில் பங்கெடுத்தது பெருமையாக உள்ளது. வைஜெயந்தி பிலிம்ஸின் பெரியோர்களின் ஆசிகள் மறக்க முடியாது. அவர்கள் மீண்டும் எப்போது அழைத்தாலும் இந்த பிராஜெக்ட்டில் நடிப்பதற்கு தான் தயாராக இருப்பதாக பதிவிட்டுள்ளார் அமிதாப்பச்சன்.
இப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தில் பிரபாஸ் கர்ணன் வேடத்திலும், அமிதாப்பச்சன் அஸ்வத்தாமன் வேடத்திலும் நடித்திருந்த நிலையில், அந்த கதாபாத்திரங்கள் குறித்து பலதரப்பட்ட கேள்விகளை எழுப்பப்பட்டது. ஆனால் அந்த கேள்விகளுக்கான விடை கல்கி படத்தின் இரண்டாம் பாகத்தில் கிடைக்கும் என்பது தெரியவந்துள்ளது.