'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... | மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா |

லட்சுமி காந்தன் கொலை வழக்கில் 30 மாத சிறைவாசத்திற்குப் பிறகு, என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்து, இயக்கிய படம் 'மணமகள்'. பிரபல மலையாள நாடக ஆசிரியர் முன்ஷி பரமு பிள்ளையின் பிரபலமான மலையாள நாடகமான 'சுப்ரபா'வை அடிப்படையாகக் கொண்டு, இந்தப் படம் தயாரானது. மு. கருணாநிதி வசனம் எழுதினார். என்.எஸ்.கே ஒரு சமூக சீர்திருத்தவாதியின் பாத்திரத்தில் நடித்தார். அவருடன் பத்மினி, லலிதா, எஸ்.வி.சஹஸ்ரநாமம், டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் மற்றும் டி.எஸ்.துரைராஜ் ஆகியோரும் நடித்தனர்.
பெண்களுக்கு அவர்கள் சம்மதம் இல்லாமல் கட்டாயம் திருமணம் செய்து வைப்பது தொடர்பான கதை. அந்த காலத்தில் படத்தில் பணியாற்றும் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் வெளியில் தெரிய மாட்டார்கள். ஆனால் இந்த படத்தின் டைட்டிலின் போது தொழில்நுட்ப கலைஞர்களை திரையில் காட்டினார். அந்த வகையில் வசனம் எழுதிய கருணாநிதியும் திரையில் தோன்றினார்.
எஸ்எஸ் ராஜேந்திரன் இந்த படத்தில் தான் ஒரு சிறிய கேரக்டரில் அறிமுகமானார். இதில் அவர் பிச்சைக்காரனாக நடித்தார். புரட்சிகரமான வசனங்களை பேசினார். அவர் காட்சிகளும் அவர் பேசிய வசனங்களும் அமைதிக்கு பங்கும் விளைவிக்கலாம் என்று கூறி தணிக்கை குழு நீக்கிவிட்டது. என்றாலும் டைட்டில் கார்டில் எஸ்எஸ் ராஜேந்திரன் பெயர் இடம் பெற்றது. பின்னர் அவர் 'பராசக்தி' படத்தில் நடித்து புகழ் பெற்றார்.