சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு |
எழில் இயக்கிய 'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் ரோபோ சங்கர், சூரி, ரவிமரியா கூட்டணியில் உருவான 'அன்னிக்கு காலையில 6 மணி இருக்கும். கோழி கொக்கரக்கோ'னு கூவியது என்ற காமெடி வெகுபிரபலம். படம் வெளியாகி, 9 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அந்த காமெடி பேசப்படுகிறது. பலரால் சிரிக்கப்படுகிறது. அந்த காமெடியை மையமாக வைத்து பல மீம்ஸ், ட்ரோல் வந்துவிட்டன.
அந்த காமெடி குறித்து பேசியுள்ள இயக்குனர் ஆர்.கே.செல்வமணி 'பெப்சி, தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட பல விவகாரங்களால் எனக்கு ஏகப்பட்ட டென்ஷன். அந்த மனநிலையில் வீட்டுக்கு போவேன். என் முகத்தை பார்த்துவிட்டு வீட்டில் உள்ளவர்கள் தள்ளிப்போய்விடுவார்கள். ஆனால், நானே, என் மனநிலையை மாற்ற இந்த காமெடியை பார்த்து ரசிப்பேன். என்னை அறியாமல் சிரித்து விடுவேன். மனம் லேசாகிவிடும். உண்மையில் ஒரு படத்தில் காமெடி எடுப்பதுதான் கஷ்டம். நான் காமெடி சீன் எடுக்கும்போது அதில் நடிப்பவர்கள் ஆளாளுக்கு சொந்த வசனங்களை அடுக்குவார்கள். அவர்களுக்குள் போட்டி வரும். எனக்கு எப்படி முடிப்பது என்று தெரியாது. எடிட்டரும் கஷ்டப்படுவார்கள். ஆகவே, மற்ற சீன்களை விட காமெடி சீன் எடுப்பதுதான் எனக்கும், மற்ற இயக்குனர்களுக்கும் கஷ்டம்'' என்றார்.