தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

எழில் இயக்கிய 'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் ரோபோ சங்கர், சூரி, ரவிமரியா கூட்டணியில் உருவான 'அன்னிக்கு காலையில 6 மணி இருக்கும். கோழி கொக்கரக்கோ'னு கூவியது என்ற காமெடி வெகுபிரபலம். படம் வெளியாகி, 9 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அந்த காமெடி பேசப்படுகிறது. பலரால் சிரிக்கப்படுகிறது. அந்த காமெடியை மையமாக வைத்து பல மீம்ஸ், ட்ரோல் வந்துவிட்டன.
அந்த காமெடி குறித்து பேசியுள்ள இயக்குனர் ஆர்.கே.செல்வமணி 'பெப்சி, தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட பல விவகாரங்களால் எனக்கு ஏகப்பட்ட டென்ஷன். அந்த மனநிலையில் வீட்டுக்கு போவேன். என் முகத்தை பார்த்துவிட்டு வீட்டில் உள்ளவர்கள் தள்ளிப்போய்விடுவார்கள். ஆனால், நானே, என் மனநிலையை மாற்ற இந்த காமெடியை பார்த்து ரசிப்பேன். என்னை அறியாமல் சிரித்து விடுவேன். மனம் லேசாகிவிடும். உண்மையில் ஒரு படத்தில் காமெடி எடுப்பதுதான் கஷ்டம். நான் காமெடி சீன் எடுக்கும்போது அதில் நடிப்பவர்கள் ஆளாளுக்கு சொந்த வசனங்களை அடுக்குவார்கள். அவர்களுக்குள் போட்டி வரும். எனக்கு எப்படி முடிப்பது என்று தெரியாது. எடிட்டரும் கஷ்டப்படுவார்கள். ஆகவே, மற்ற சீன்களை விட காமெடி சீன் எடுப்பதுதான் எனக்கும், மற்ற இயக்குனர்களுக்கும் கஷ்டம்'' என்றார்.