கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
கன்னடத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான 'நான் ஈ' சுதீப் நடிக்க உள்ள அவரது 47வது படத்தை கடந்த வருடம் சுதீப் வெளிவந்து வெற்றி பெற்ற 'மேக்ஸ்' படத்தை இயக்கிய விஜய் கார்த்திகேயா இயக்க உள்ளார்.
இந்தப் படத்தை தமிழ் இயக்குனரான சேரன் முதலில் இயக்குவராக இருந்தது. தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இரண்டு வருடங்களுக்கு முன்பு சுதீப்பின் பிறந்தநாளில் வெளியானது.
சில காரணங்களால் சேரன் - சுதீப் கூட்டணி இணைந்து பணியாற்ற முடியவில்லை என்று சொல்கிறார்கள். அதனால், தான் விஜய் கார்த்திகேயவை அந்தப் படத்தை இயக்கும்படி ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
சுதீப் தற்போது 'பில்லா ரங்கா பாட்ஷா' என்ற கன்னடப் படத்தில் நடித்து வருகிறார். சேரன் வேறு ஒரு படத்தை இயக்கும் வேலைகளில் உள்ளாராம்.