தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சென்னை: போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.
போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில், கடந்த 23ல் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு, கடந்த 26ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் இதே வழக்கில் கைது செய்யப்பட்டார். இருவரும் ஜாமின் கோரி, சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து அவர்கள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், இருவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வழக்கின் புலன் விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராக வேண்டும். ரூ.10 ஆயிரத்துக்கான சொந்த ஜாமினும், ரூ.10 ஆயிரத்துக்கான இரு நபர் ஜாமினிலும் இருவரையும் ஜாமினில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.