வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
பாகுபலி படத்தில் நடித்த பிறகு பிரபாஸ், அனுஷ்கா காதல் குறித்த செய்திகள் வெளியானபோது அதை அவர்கள் இருவரும் மறுத்தார்கள். நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே என்று கூறினார்கள். இந்த நிலையில் தற்போது 43 வயதாகும் அனுஷ்கா, திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். தற்போது காட்டி என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
அனுஷ்கா அளித்துள்ள ஒரு பேட்டியில், தனது பள்ளி பருவத்தில் ஏற்பட்ட ஒரு காதல் சம்பவத்தை பகிர்ந்து கொண்டு உள்ளார். அதில், ‛‛நான் ஆறாவது படிக்கும் போது, என்னுடன் படித்த ஒரு மாணவன் என்னை காதலிப்பதாக கூறினான். உயிருக்கு உயிராக நேசிப்பதாகவும் கூறினான். அப்போது காதல் என்றாலே எனக்கு என்னவென்று தெரியாது. என்றாலும் அவன் காதலை ஏற்றுக் கொண்டேன். காதல் என்றால் என்னவென்றே புரியாத வயதில் நடந்த அந்த காதல் அனுபவத்தை இப்போது வரை என் வாழ்க்கையில் நடந்த ஒரு இனிய அனுபவமாக பாதுகாத்து வருகிறேன்'' என்று கூறியுள்ளார் அனுஷ்கா.