வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் மகேஷ் பாபுவிற்கு அப்பாவாக நடிக்க விக்ரமிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார் ராஜமவுலி. ஆனால் அவர் அப்பா வேடத்தில் நடிக்க மறுத்து விட்டார். அதை அடுத்து தற்போது மாதவன் அந்த வேடத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். தற்போது மகேஷ் பாபுவுக்கு 49 வயதாகிறது. மாதவனுக்கு 55 வயதாகிறது.1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கென்யா நாட்டில் நடைபெற உள்ளது. அப்போது மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ராவுடன் மாதவன் நடிக்கும் காட்சிகளும் படமாக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.