இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் |
சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா. தென்னிந்திய சினிமா தாண்டி ஹிந்தியிலும் அசத்தி வருகிறார். இவர் கர்நாடக மாநிலம், கூர்க் பகுதியில் வாழும் கொடவா சமூகத்தை சேர்ந்தவர். சமீபத்திய ஒரு பேட்டியில், ‛‛இந்த சமூகத்தில் இருந்து வந்த முதல் நடிகை நான்தான்'' என்று கூறியிருந்தார் ராஷ்மிகா. இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
கொடவா சமூகத்தில் இருந்து இதற்கு முன்பு பல நடிகைகள் திரைத்துறைக்கு வந்துள்ளனர். குறிப்பாக 90களின் இறுதியில் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகை பிரேமா அந்த சமூகத்தை சேர்ந்தவர் தான் என்பதை குறிப்பிட்டு ராஷ்மிகாவுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசியுள்ள பிரேமா, "நான்கூட கொடவா சமூகத்தின் முதல் நடிகை அல்ல. நான் நடிக்க வருவதற்கு முன்பே இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் சினிமாவில் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக நடிகை சசிகலா எனக்கு முன்பே சினிமாவிற்குள் வந்துவிட்டார். அதன் பிறகுதான் நான் சினிமாவிற்கு வந்தேன். தற்போதும் நிறைய கொடவா சமூகத்தினர் சினிமாவின் பல பிரிவுகளில் இருக்கிறார்கள். நடிகர், நடிகைகளாகவும் இருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.