தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

மலையாள சினிமாவின் முன்னணி நடிகையான அன்னா பென் 'கொட்டுக்காளி' படத்தின் மூலம் அறிமுகமானார். இதில் அவருக்கு பாராட்டுகளும், பல விருதுகளும் கிடைத்தது. இந்த நிலையில் அடுத்து அவர் இன்னும் பெயரிடப்படாத படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்கிறார்.
இந்த படத்தை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனமான நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'நாய் சேகர்' படத்தை இயக்கியவரும், கோமாளி, கைதி, விஐபி ', இமைக்கா நொடிகள், கீ உள்ளிட்ட படங்களில் நடித்தவருமான கிஷோர் ராஜ்குமார் இயக்கி, நாயகனாக நடிக்கிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது “காதலும் நகைச்சுவையும் நிரம்பிய கதை இது. 'பீல் குட்' உணர்வைத் தரும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை உருவாக்க உந்து சக்தியாக இருந்தவர் கே.பாக்யராஜ் சார். அவர் இயக்கிய படங்கள் போல இன்றைய காலகட்டத்தில் படங்கள் வருவதில்லையே என்ற குறையை இந்தப் படம் போக்கும். ஜோடி பொருத்தம் பற்றி பேசும் இந்த கலகலப்பான படம் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இருக்கும். திறமையான நடிகையான அன்னா பென் உடன் இணைவதில் மிகவும் மகிழ்ச்சி” என்றார்.