பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் | தலைவன் தலைவி 50 கோடி வசூல் என அறிவிப்பு | யு டியூப் ரிலீஸ் : அமீர்கான் வழியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா ? | இன்று 7 படங்கள் ரிலீஸ் : முன்பதிவு நிலவரம் என்ன? |
சில தினங்களுக்கு முன்பு நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிடப்பட்டு பின்னர் நீக்கப்பட்டதாக கூறப்பட்ட ஸ்க்ரீன்ஷாட் ஒன்று வைரலாக பரவியது. அதில் “ஒரு முட்டாளை திருமணம் செய்யும்போது திருமணம் என்பது ஒரு தவறு என்று ஆகிறது. உங்கள் கணவரின் நடவடிக்கைகளுக்கு நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். காரணம் ஆண்கள் உண்மையில் வளர்வதே இல்லை” என்ற வாசகங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. இதை வைத்து நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் பிரிய போவதாக செய்திகள் பரவின. ஆனால் இது போலியான நபர்களால் உருவாக்கப்பட்ட பதிவு. இதுபற்றி கூட நாம் விசாரித்து ஒரு செய்தி வெளியிட்டு இருந்தோம். அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது இன்ஸ்ட்ராகிராமில் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில் விக்னேஷ் சிவன் முதுகில் அவர் படுத்திருப்பது போன்ற படம் ஒன்றை வெளியிட்டு “எங்களை பற்றி வரும் கிறுக்குத்தனமான செய்திகளுக்கு எங்களுடைய ரியாக்ஷன்” என்று குறிப்பிட்டுள்ளார்.