இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் |
சமீபத்தில் தான் அளித்த ஒரு பேட்டியில், திருமணம் செய்து கொள்வது குறித்து இன்னும் யோசிக்கவே இல்லை. ஒருவேளை திருமணமே செய்யாமல் கூட சிங்கிளாக வாழ்வேன். எதிர்காலத்தில் என்ன நடக்குமோ யாருக்கு தெரியும் என்று கூறியிருந்தார் ஸ்ருதிஹாசன். இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள இன்னொரு செய்தியில், பலமுறை காதலித்தாலும் அந்த காதல் திருமணம் வரை செல்லாமல் தோல்வியில் தான் முடிந்திருக்கிறது. ஆனால் அந்த தோல்விக்கு ஒருபோதும் நான் காரணம் அல்ல. அதோடு எப்போதுமே நான் அம்மாவாக வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளேன். என்றாலும் ஒரு குழந்தைக்கு இரண்டு பெற்றோர் வேண்டுமே. அப்போதுதான் அது சிறந்ததாக இருக்கும். அதனால் குழந்தையை தத்து எடுத்து வளர்க்கலாம் என்று கூட நான் யோசித்து வருகிறேன் என கூறியிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.