வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் பாகுபலி. கடந்த 2015ம் ஆண்டில் முதல் பாகம் வெளியான நிலையில் 2017ல் இரண்டாம் பாகமும் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் பாகுபலி திரைக்கு வந்து பத்தாம் ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து ‛பாகுபலி தி எபிக்' என்ற பெயரில் அக்டோபர் 31ம் தேதி ரீரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்தார்கள்.
இந்நிலையில் இந்த படத்தை வரவேற்று சோசியல் மீடியாவில் பலரும் கருத்து வெளியிட்டார்கள். குறிப்பாக, புக் மை ஷோ- வில் இந்த படத்தை பார்ப்பதற்கு ஒரே வாரத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அதோடு, இப்படி ஒரு செய்தி வெளியானதை அடுத்து, பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து 5 மணி நேரம் 27 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில், வெளியிட இருப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வெளியானது. ஆனால், அந்த செய்தியை அப்படக் குழு மறுத்துள்ளது.
இந்த படத்தின் நீளம் ஒரு ஐபிஎல் போட்டி நேரத்திற்கு சமமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்கள். கூடிய சீக்கிரமே பாகுபலி தி எபிக் படத்தின் அதிகாரப்பூர்வ ரன்னிங் டைம் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.