பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் |
சென்னையில் நடந்த ‛பிளாக் மெயில்' பட விழாவில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் அமல்ராஜ், ''ஹீரோ ஜி.வி.பிரகாஷிற்கு மிக்க நன்றி. இந்த படம் ஒரு கட்டத்தில் நகராமல் இருந்தது. இன்னும் பல நாட்கள் படப்பிடிப்பு நடத்தினால் மட்டுமே படத்தை முடிக்க முடியும் என்ற நிலை. நான் ஹீரோவிடம் பேசினேன், என் நிலைமையை சொன்னேன். அவர் பாதி சம்பளம் மட்டுமே வாங்கிய நிலையில், மறுப்பு எதுவும் சொல்லாமல் மீண்டும் படத்தில் நடிக்க வந்தார். மீதி சம்பளத்தை விரைவில் கொடுத்து விடுவேன்' என்று வெளிப்படையாக பேசினார்.
அடுத்து பேசிய இயக்குனர் வசந்தபாலன், 'நான்தான் வெயில் படத்தின் மூலம் அவரை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தேன். அன்று முதல் இன்று வரை அப்படியே இருக்கிறார். நான் இயக்கிய 2 படத்துக்கு கூட அவர் சம்பளம் வாங்கவில்லை. பட நிலைமையை சொன்னபோது, மானேஜரிடம் பேசுகிறேன், டைம் கொடுங்கள் என்று கூட சொல்லவில்லை. டக்கென சம்பளத்தை விட்டுக் கொடுக்க முடிவெடுத்தார்'' என்றார்.
இந்த பேச்சை கேட்டவர்கள், இதே பாலிசியை மற்ற தயாரிப்பாளர்களுக்கும் கடைபிடித்தால், ஜி.வி.பிரகாஷ் ஒவ்வொரு ஆண்டும் பலகோடி சம்பளத்தை இழக்க நேரிடும் என்று கமென்ட் அடித்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு படவிழாவில் பேசிய தயாரிப்பாளர் தேனப்பன். 'சமீபத்தில் வெளியான ஒரு பெரிய பட்ஜெட் படம் பைனான்ஸ் பிரச்னையில் தவித்தபோது, என்னால் அந்த படம் நிற்க வேண்டாம் என சொல்லி, தனது பெரிய சம்பவளத்தை ஜி.வி.பிரகாஷ் விட்டுக்கொடுத்தார்' என பேசியிருந்தார்.
சம்பள விஷயத்தில் அவர் மாமா, ஏ.ஆர்.ரஹ்மான் கறார். ஆனால், நண்பர்கள், நல்ல படம், தயாரிப்பாளர்களின் நிலை, இயக்குனரின் எதிர்காலம், படம் ரிலீஸ் ஆக வேண்டிய நிலை போன்ற காரணங்களாக, தனது சம்பளத்தை தயங்காமல் விட்டுக் கொடுக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அவர் தயாரிப்பாளர் என்பதால் இந்த முடிவுகளை யோசிக்காமல் எடுப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.