ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை |

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், பிரதீப் ரங்கநாதன், கிர்த்தி ஷெட்டி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'. செப்டம்பர் 18ம் தேதியன்று இப்படம் வெளியாகும் என மே மாதமே அறிவித்துவிட்டார்கள். ஆனால், கடந்த சில நாட்களாக இப்படம் தள்ளி வைக்கப்படுகிறது என்று தகவல்கள் வெளியாகின. அடுத்த வருடத்திற்கே தள்ளி வைத்துவிட்டார்கள் என்று கூட சிலர் பேசி வருகிறார்கள்.
இதனிடையே, இந்தப் பட வெளியீட்டிற்கு இசையமைப்பாளர் அனிருத் ஒரு காரணம் என்ற தகவல் கசிந்துள்ளது. படத்தின் பின்னணி இசையை விரைந்து முடிக்க முடியாது என அவர் தரப்பில் சொல்லப்பட்டதாம். அதனால் வேறு வழியின்றி படக்குழு சம்மதம் சொல்லிவிட்டதாம்.
தீபாவளியை முன்னிட்டு பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டியூட்' படம் வெளியாவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்குப் பிறகு 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தை வெளியிடலாம் என்று பிரதீப்பும் சொல்கிறாராம். இது அடுத்து ஏதாவது ஒரு பஞ்சாயத்தில் போய் நிற்கப் போகிறதா அல்லது சுமூகமாக போவார்களா என்பது விரைவில் தெரிய வரும்.