ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி | ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் இனி நடிக்க மாட்டேன்: பிரகாஷ்ராஜ் |
தனுஷ் நடித்த பாலிவுட் படம் 'ராஞ்சனா'. 2013ம் ஆண்டு வெளியான இந்த படம் தமிழில் 'அம்பிகாபதி' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது. தற்போது இந்த படத்தை ஈராஸ் மீடியா நிறுவனம் மறு வெளியீடு செய்ய இருக்கிறது. ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் படத்தின் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டு வருகிற ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் படத்தின் கிளைமாக்ஸ் மாற்றப்படுவதற்கு இயக்குனர் ஆனந்த் எல்.ராய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "இது படைப்பாளியின் படைப்பு சுதந்திரத்திற்கு எதிரானது. படத்தின் பலமே அதன் கிளைமாக்ஸ்தான் அதை வியாபாரத்திற்காக மாற்றுவதை ஏற்க முடியாது" என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து தயாரிப்பு தரப்பு அளித்துள்ள விளக்கத்தில் "படத்தின் முழுமையான பதிப்புரிமை மற்றும் தயாரிப்பு உரிமை எங்களிடம் உள்ளது. ஏ.ஐ. வசதி மூலமாக படத்தின் சில அம்சங்களைப் புதுப்பித்துள்ளோம். இது அடிப்படை படைப்பின் மாற்றமல்ல, கலையின் புதிய வடிவம். உலக சினிமாவில் இது போன்ற மாற்றுப் பதிப்புகள் வழக்கம்தான். புதிய 'கிளைமேக்ஸ்' உடன் படம் வருவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளது.