தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‛சைரா நரசிம்ம ரெட்டி, காட்பாதர்' போன்ற படங்களில் நடித்த நயன்தாரா தற்போது அவரது 157வது படத்திலும் இணைந்திருக்கிறார். அனில் ரவிபுடி இயக்கும் இதில் சிரஞ்சீவியும், நயன்தாராவும் திருமணமான தம்பதிகளாக நடித்து வருகிறார்கள். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முசோரியில் நடந்த நிலையில், தற்போது ஒரு காதல் பாடல் கேரளாவில் படமாக்கப்பட்டுள்ளது.
குடும்ப பின்னணி கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்தில் கேத்ரின் தெரசாவும் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை 2026ம் ஆண்டு சங்கராந்திக்கு வெளியிட்ட திட்டமிட்டுள்ளார்கள். மேலும், இப்படத்தில் சிரஞ்சீவியும் நயன்தாராவும் திருமணமான தம்பதிகளாக நடித்த போதும் அவர்களுக்கு இடையே ரொமான்டிக் காட்சிகள் அதிகமாக இடம்பெறுவதாகவும், தாங்கள் காதலித்த காலகட்டத்தை அவர்கள் நினைவு கூறும் இளமை ததும்பும் காட்சிகளும் இந்த படத்தில் இடம்பெற இருப்பதாகவும் இயக்குனர் அனில் ரவி புடி தெரிவித்துள்ளார்.