‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை | 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் | இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி | தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து | வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி |
சென்னையில் நடந்த ‛ரெட் பிளவர்' படவிழாவில் பேசிய நடிகர் சங்க செயலாளர் விஷால், இனி வரும் காலங்களில் முதல் 3 நாட்கள், தியேட்டர் வாசல்களில் பப்ளிக் ரிவியூ எடுக்க யு-டியூப் சேனல்கள், மீடியாவை அனுமதிக்ககூடாது. இதற்கு தயாரிப்பாளர் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் அதிபர்கள் சங்கம் இணைந்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். முதல் 3 நாட்கள் படம் ஓடினால் நல்லது. அடுத்த வசூலையும் இப்படிப்பட்ட ரிவியூ கெடுத்து விடுகின்றன என்று பேசினார்.
விஷால் பேச்சுக்கு ஓரளவு ஆதரவும், நிறைய எதிர்ப்பும் வந்தன. குறிப்பாக, சினிமாவில் உள்ளவர்கள் விஷால் சொல்வதை ஏற்க முடியாது. சின்ன படங்களுக்கு பப்ளிக் ரிவியூ அவசியம், படம் நல்லா இருந்தால் ஓடும், இல்லாவிட்டால் என்ன செய்தாலும் ஓடாது என்றனர்.
விஷால் பேசியபின் பல படங்கள் வந்துவிட்டன. அந்த சமயங்களில் பப்ளிக் ரிவியூ என்ற பெயரில் தியேட்டர் வளாகத்தில் பேட்டி எடுக்க யாரும் தடை விதிக்கவில்லை. எந்த சினிமா சங்கமும் இந்த விஷயத்தில் கூடி பேசி எந்த முடிவும் எடுக்கவில்லை. விஷால் பேச்சை பலரும் நிராகரித்துவிட்டதாகவே தெரிகிறது.