ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பாலிவுட்டில் அடுத்ததாக மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக 'வார்-2' உருவாகி உள்ளது. பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் கதாநாயகனாக நடிக்க இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ளார். ஹிந்தியில் இவருக்கு இதுதான் முதல் படம். கதாநாயகியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 14ம் தேதி கூலி திரைப்படம் வெளியாகும் அதே நாளில் தான் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில் யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது என்று சமீபத்தில் ஒரு பேட்டியல் சோசியல் மீடியாவில் வெளியானது.
அதில் கதாநாயகன் ஹிருத்திக் ரோஷனுக்கு 48 கோடி சம்பளம் என்றும் அதேசமயம் அதில் வில்லனாக நடித்துள்ள ஜூனியர் என்டிஆருக்கு 60 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கதாநாயகி கியாரா அத்வானிக்கு 15 கோடியும், இயக்குனர் அயன் முகர்ஜிக்கு 32 கோடியும் சம்பளமாக கொடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 250 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படி பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் ஒரு கதாநாயகனை விட முதன்முறையாக பாலிவுட்டில் அடி எடுத்து வைத்துள்ள ஜூனியர் என்டிஆருக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது பாலிவுட் திரையுலகையும் அங்குள்ள ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.