வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
மலையாள திரையுலகில் கடந்த வருடம் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை காரணமாக நடிகர் சங்கத்தில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டு தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் ராஜினாமா செய்தார். மற்ற நிர்வாகிகளும் ராஜினாமா செய்ததால் அடுத்ததாக விரைவில் நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு நடிகை ஸ்வேதா மேனன் போட்டியிட மனு செய்துள்ளார் என்கிற தகவலும் வெளியானது.
இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தயாரிப்பாளர் சங்கம் குறித்தும் சில தயாரிப்பாளர்கள் குறித்தும் பெண் தயாரிப்பாளர் சான்ட்ரா தாமஸ் தொடர்ந்து தனது எதிர்ப்பை தெரிவித்து வந்தார். இவர் ஒரு நடிகையும் கூட. சில மாதங்களுக்கு முன்பு இவரை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நீக்குவதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார் சான்ட்ரா தாமஸ். இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் தற்போதைய பதவி காலம் முடிந்திருப்பதால் புதிய பொறுப்புகளுக்கான விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சான்ட்ரா தாமஸ் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட நாமினேஷன் செய்துள்ளார். தயாரிப்பாளர் சங்கம் வந்த அவர் பர்தா அணிந்து வந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதேசமயம் இது குறித்து அவர் கூறும்போது, “ஏற்கனவே ஒரு முறை தயாரிப்பாளர் சங்கத்தில் கூட்டம் நடந்தபோது அதில் நிர்வாகிகளாக இருந்தவர்கள் ஒரு சிலர் என்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயற்சி செய்தனர். இது குறித்து அப்போதே நான் புகார் அளித்துள்ளேன். அதனால் இப்போது முன் எச்சரிக்கையாக பர்தா அணிந்து வந்து விடுவது நல்லது என்று நினைத்து இதை அணிந்து வந்துள்ளேன். இதுபோல பெண் தயாரிப்பாளர்களுக்கு நிறைய சிக்கல்கள் இங்கே இருக்கின்றன. அதை எல்லாம் தீர்த்து நேர்மையான நிர்வாகத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் தலைவர் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்துள்ளேன்” என்று கூறியுள்ளார் சான்ட்ரா தாமஸ்.