‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை | 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் | இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி | தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து | வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி |
தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது உலக அளவிலும் புகழ் பெற்ற இசையமைப்பாளராக இருப்பவர் சென்னையைச் சேர்ந்த ஏஆர் ரஹ்மான். அடிக்கடி இசை வேலைகளுக்காக அமெரிக்காவிற்குச் செல்வார். தற்போது அமெரிக்கா சென்றுள்ள ஏஆர் ரஹ்மான், அங்கு மூத்த பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸை சந்தித்தது குறித்து பதிவிட்டுள்ளார்.
“எனது சிறுவயது அபிமானியை அவரது டல்லாஸ் இடத்தில் சந்தித்தேன். அவரது ஆராய்ச்சிப் பணிகளையும், இந்திய பாரம்பரிய, (கர்நாடக) இசையின் மீதான அவரது ஆர்வத்தையும் கண்டு வியந்தேன்,” என ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
ரஹ்மான் இசையில் 'பச்சைக் கிளிகள் தோளோடு, நெஞ்சே நெஞ்சே,' உள்ளிட்ட சில பாடல்களைப் பாடியிருக்கிறார் ஜேசுதாஸ்.
60 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா இசை, பக்திப் பாடல்கள் என இந்திய மொழிகளில் பலவற்றில் பாடியவர் ஜேசுதாஸ். சமீப காலங்களில் சினிமாவில் பாடுவதை குறைத்துக் கொண்டுவிட்டார்.