ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே |

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆலியா பட், நடிகரான ரன்பீர் சிங் இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். தங்களது குடும்பத்தாருடன் வசிக்க மும்பை, பாந்த்ரா மேற்குப் பகுதியில் 250 கோடி ரூபாய் செலவில் கனவு இல்லம் ஒன்றை அவர்கள் கட்டி வருகிறார்கள். அதன் வேலைகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.
இரு தினங்களுக்கு முன்பு ஆலியா பட் அவரது மாமியார் நீத்து கபூர் உடன் வீட்டை மேற்பார்வையிட்டுள்ளார். விரைவில் கிரஹப்பிரவேச நிகழ்ச்சியை நடத்துவதற்காகவே அவர்கள் சென்று விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
மிகவும் ஆடம்பரமாக ஆறு அடுக்கு மாடியாக அந்த வீடு கட்டப்பட்டு வருகிறது. அந்த வீட்டிற்கு ரன்பீர் பாட்டி கிருஷ்ணா ராஜ் கபூர் நினைவாக கிருஷ்ணா ராஜ் என்ற பெயரை வைத்துள்ளார்களாம். மாடர்னாகவும், கலாச்சாரத்துடனும் அந்த வீட்டை கடந்த சில வருடங்களாக பார்த்துப் பார்த்து கட்டி வருகிறார்கள்.