தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ராஜ்யசபா எம்பி ஆகிவிட்ட நடிகர் கமல்ஹாசன், முதன்முறையாக அரசு முத்திரை பதித்த லட்டர் பேட்டில் நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேசனை பாராட்டி, ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அவர் எம்பி ஆனபின் முதல் கையெழுத்தும் இதுதான் என்று கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு நடந்த அகரம் 15 ஆண்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், என்னை சித்தப்பா என அழைப்பதா? அண்ணன் என அழைப்பதா என சூர்யா புகழ்கிறார். நான் அவரை தம்பி என அழைப்பதா? அண்ணன் என அழைப்பதா என யோசிக்கிறேன் என்று பேசினார்.
மேலும் என் ரசிகர் மன்றங்கள் நற்பணி மன்றங்களாக மாற, அண்ணன் சிவகுமார்தான் காரணம். அந்த காலத்தில் அவர் நமக்கு எதுக்கு ரசிகர் மன்றம் என கேட்டார். பாலசந்தரால் நான் நட்சத்திர அந்தஸ்து பெற என் மீது பாசத்தில் வந்தவர்களை நற்பணி மன்றத்தில் சேர்த்தேன் என்றார். மேலும் அகரம் பவுண்டேசன் பற்றி சமீபத்தில் முதல்வரிடம் கூட பேசினேன். இவர்களை போன்றவர்கள் பணம் கேட்கவில்லை. அனுமதிதான் கேட்கிறார்கள் அரசு உதவி செய்ய வேண்டும் என்றேன் என்றார்.
சூர்யா குடும்பம் கமல்ஹாசன் நட்பு அதிகமாகி வருவதால், வருங்காலத்தில் சூர்யா அல்லது கார்த்தி இருவரில் ஒருவர் 'கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் முழுநீள ஹீரோ வேடத்தில் நடிக்க வாய்ப்பு என்று கூறப்படுகிறது.