தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள மதராஸி படத்தில் நடித்து முடித்திருக்கும் சிவகார்த்திகேயன் அடுத்து சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இதில், மதராஸி படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது. தான் அளித்துள்ள ஒரு பேட்டியில் தனது பல அழுத்தத்தை போக்கும் அருமருந்தாக தனது பிள்ளைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
அது குறித்து அவர் கூறுகையில், ‛‛என்னுடைய மகள், இரண்டு மகன்கள் என மூன்று பிள்ளைகளையும் எனது மனைவிதான் முழுமையாக கவனித்துக் கொள்கிறார். அவருக்குத்தான் அவர்களை கவனித்துக் கொள்வதில் எவ்வளவு சிரமம் என்பது தெரியும். அதோடு நான் படப்பிடிப்பு தளங்களில் மன அழுத்தம் ஏற்பட்டு வீட்டுக்கு செல்லும்போது என்னுடைய பிள்ளைகள் தான் அந்த அழுத்தத்தை போக்கி எனக்கு பெரிய அளவில் மகிழ்ச்சியை கொடுக்கிறார்கள். அவர்களுடன் சிறிது நேரம் விளையாடி மகிழ்ந்து விட்டாலே என் மன அழுத்தம் எல்லாம் மாயமாகிவிடும்'' என்கிறார் சிவகார்த்திகேயன்.