தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

இயக்குனர் கவுதம் தின்னனூரி இயக்கத்தில் வெளியான 'ஜெர்ஸி' படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்து அவர் நடிகர் ராம் சரணை வைத்து படம் இயக்குவதாக தகவல் வெளியானது. ஆனால், அந்த படம் அடுத்த கட்டத்திற்கு நகராமல் கைவிடப்பட்டது. இதையடுத்து கவுதம் தற்போது விஜய் தேவரகொண்டாவை வைத்து 'கிங்டம்' படத்தை இயக்கினார். 'கிங்டம்' படம் வெளியான சில நாட்களில் ரூ. 80 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
கவுதம் தின்னனூரி அளித்த பேட்டியில் ராம் சரண் படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் கூறியதாவது," ஜெர்ஸி படத்திற்கு பிறகு ராம்சரணிடம் புதிய கதையொன்றை கூறினேன். அவருக்கு பிடித்திருந்தது. அதன் பின்னர் அந்த கதையினை முழுமையான திரைக்கதையாக எழுதினேன். அது ராம்சரணுக்கு பொருத்தமாக இருக்காது என்பதை உணர்ந்தேன். ராம்சரண் போன்ற ஒரு நட்சத்திர நடிகரை இயக்குவது ஒரு முறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு. அதை ஏனோ தானோ என்று இயக்க விரும்பவில்லை. இது குறித்து அவரிடமும் கூறினேன். அதன் பின்னர் இருவரும் சரியான கதை அமையும் போது இணைந்து பணிபுரிய முடிவு செய்தோம்” என தெரிவித்துள்ளார்.