தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கொலை வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது.
பிரபல கன்னட நடிகர் தர்ஷன், தனது காதலியும், நடிகையுமான பவித்ரா கவுடாவிற்கு தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி டார்ச்சர் கொடுத்தார் என அவரை கொலை செய்ததாக கூறப்படும் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆரம்பத்தில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் அங்கே முறைகேடாக பல வசதிகளை பெற்றதாக தெரியவந்த நிலையில் பின்னர் பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார்.
அதன்பிறகு பலமுறை தர்ஷன் ஜாமின் விண்ணப்பித்தும் அவை நிராகரிக்கப்பட்டது. ஒரு வழியாக கடந்த டிசம்பர் மாதம் நிபந்தனையுடன் ஜாமின் பெற்றார் தர்ஷன். அவருடன் பவித்ரா கவுடா உள்ளிட் 7 பேரும் ஜாமின் பெற்றனர். இந்நிலையில் இந்த 7 பேருக்கும் வழங்கிய ஜாமினை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை கடந்தமாதம் நிறைவடைந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் நீதிபகள் மகாதேவன், பர்திவாலா அடங்கிய அமர்வு முன் வந்தது.
அப்போது சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை, சாட்சிகள் மிரட்டப்பட கூடும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், தர்ஷன் உள்ளிட்ட 7 பேருக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்து உத்தரவிட்டனர். இதனால் தர்ஷன் மீண்டும் சிறை செல்ல உள்ளார்.