Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' | அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | 'மதராஸி'யில் வட இந்தியர், தென் இந்தியர் மோதலா? : ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆரின் 'இதயக்கனி'க்கு இன்று பொன்விழா | பேண்டஸி படமாக 'விஸ்வம்பரா' | தமிழ் படத்தில் இங்கிலாந்து நடிகை | நடிகை பாலியல் குற்றச்சாட்டு : கேரள இளைஞர் காங்கிரஸ் பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ | பிளாஷ்பேக் : அவமானங்களை வெகுமானமாக்கி வென்ற சிரஞ்சீவி | ரஜினிகாந்த் 50 : விழா நடத்துமா தமிழ்த் திரையுலகம்? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'மதராஸி'யில் வட இந்தியர், தென் இந்தியர் மோதலா? : ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்

22 ஆக, 2025 - 01:53 IST
எழுத்தின் அளவு:
Is-there-a-clash-between-North-Indians-and-South-Indians-in-Madras-A.R.-Murugadoss-explains
Advertisement

சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் 'மதராஸி'. தொடர் தோல்விகளுக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால் வில்லனாக நடிக்கிறார். இதுதவிர மலையாள நடிகர் பிஜு மேனன், விக்ராந்த், டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார்.

மதராஸி என்பது தமிழர்களை வட இந்தியர்கள் அழைக்கும் சொல். படத்தின் வில்லன் வட இந்தியரான வித்யூத் ஜமால் இதை வைத்துக் கொண்டு இது வட இந்திய வில்லனுக்கும், தமிழ் இளைஞனுக்குமான மோதல் கதை என தகவல்கள் பரவி வரும் நிலையில், படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருப்பதாவது:

6 மாதத்திற்கு முன்பே உருவான கதையை சிவகார்த்திகேயனுக்காக மதராஸியாக மாற்றினேன். சென்னைதான் படத்தின் கதை களம். படத்தின் வில்லன் வட இந்தியாவை சேர்ந்தவர். இந்த கேரக்டரில் வித்யூத் ஜம்வால் தான் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அவர் இப்போது அங்கு ஹீரோவாக கலக்கி கொண்டிருக்கிறார். அதனால் அவர் நடிப்பாரா என்ற தயக்கம் இருந்தது. ஆனால் நான் அழைத்த உடன் சென்னை வந்து இறங்கி விட்டார்.
ஒரு வட இந்தியரின் பார்வையில்தான் கதை பயணிக்கும், சிவா வழக்கமான இளைஞர்களிலிருந்து மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். அவர் இரண்டு வேடங்களில் நடிக்கவில்லை. இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார்.

பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்துடன் ஒரு நாயகியை தேடியபோது கன்னடத்தில் நடித்த ருக்மணி வசந்த் என்னோட நாயகி மாலதியாக தெரிந்தார். அவரையே நாயகியாக்கி விட்டோம். இப்போது புதிதாக முளைத்திருக்கும் ஒரு ஆபத்தை பற்றி படம் பேசுகிறது. அந்த ஆபத்து நாளை நமக்கு வரலாம் என்று எச்சரிக்கை செய்யும் படமாகவும் இருக்கும் என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆரின் 'இதயக்கனி'க்கு இன்று பொன்விழாபிளாஷ்பேக்: எம்.ஜி.ஆரின் ... அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடையில்லை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in