வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

விநாயகர் சதுர்த்தி பண்டிகை அடுத்தவாரம் ஆகஸ்ட் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. விடுமுறை நாள் என்பதால் அன்றைய தினத்திலும் புதிய படங்கள் வெளியாவது வழக்கம். இந்த வருட விநாயகர் சதுர்த்தி தினத்தன்று கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா', ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள 'அடங்காதே' ஆகிய படங்கள் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இரண்டு படங்களின் வெளியீடு பற்றி எந்த ஒரு சத்தமும் இல்லை. எந்த விதமான போஸ்டர்கள், சமூக வலைத்தள பதிவுகள், பத்திரிகையாளர் சந்திப்புகள் என எதுவுமே நடக்கவில்லை. அதனால், அந்த இரண்டு படங்களும் அன்றைய தினம் வெளியாகுமா என்பது சந்தேகம்தான்.
அது போல ஆகஸ்ட் 29ம் தேதி அதர்வா நடித்துள்ள 'தணல்' படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. அந்தப் படம் பற்றிய அப்டேட் எதுவும் பின்னர் வெளியாகவில்லை. அதனால், அந்தப் படமும் வெளியாகுமா என்பது தெரியவில்லை.
எந்தெந்த படங்கள் வரும் வாரம் வெளியாகும் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிய வரும்.