தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான ‛திரிஷ்யம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சில வருடங்கள் கழித்து திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி அதுவும் முதல் பாகத்திற்கு சமமான வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. இந்த இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து இயல்பாகவே மூன்றாவது பாகம் எப்போது என ரசிகர்கள் கேட்கத் தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில் தற்போது திரிஷ்யம் மூன்றாம் பாகத்திற்கான வேலைகளில் இயக்குனர் ஜீத்து ஜோசப் ஈடுபட்டுள்ளார். படப்பிடிப்பும் அக்டோபர் மாதம் துவங்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில் ‛‛திரிஷ்யம் படத்தின் முந்தைய இரண்டு பாகங்களைப் போல மூன்றாம் பாகம் இருக்காது அதில் ஒரு புதுவிதமான ட்ரீட்மென்ட் கொடுக்க இருக்கிறேன்'' என கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “என்னை பொறுத்தவரை விதவிதமான படங்களை இயக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஆனால் என்னுடைய மெமரீஸ் மற்றும் திரிஷ்யம் படங்களை பார்த்துவிட்டு தயாரிப்பாளர்கள், பாக்ஸ் ஆபிஸ் வெற்றிக்கு இது போன்ற கதைகள் தான் நன்றாக இருக்கிறது என்று வலியுறுத்துகிறார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் இது போன்ற த்ரில்லர் மற்றும் காமெடி படங்களையே தொடர்ந்து கொடுத்தால் ரசிகர்களுக்கும் போர் அடித்து விடும். அதனால் இந்த படத்திற்கு பிறகு கொஞ்ச நாளைக்கு நான் திரில்லர் பாதையை விட்டு விலகி பயணிக்க முடிவு செய்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.