Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா

24 ஆக, 2025 - 11:28 IST
எழுத்தின் அளவு:
I-followed-Mani-Ratnam-at-dawn-for-a-whole-month-Nagarjuna
Advertisement


கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‛குபேரா' படத்தில் தெலுங்கு நடிகரான நாகார்ஜூனா கிட்டத்தட்ட ஒரு எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கூட சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் ‛கூலி' திரைப்படத்தில் இவரது ஸ்டைலிஷான வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்று வருகிறது.

தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய குடும்பத்தில் இருந்து வாரிசு நடிகராக களம் இறங்கினாலும் கூட 1989ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‛கீதாஞ்சலி' மற்றும் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான ‛சிவா' என இரண்டு படங்கள் தான் அவருக்கு இளம் ரசிகர்களை தேடி தந்ததுடன் முன்னணி ஹீரோ அந்தஸ்துக்கும் உயர்த்தின. குறிப்பாக மணிரத்னம் படத்தில் நடிக்க நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா என பல முன்னணி நடிகர்கள் இயங்கிக் கொண்டிருந்த சமயத்தில் அந்த வாய்ப்பு தனக்கு எப்படி கிடைத்தது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் நாகார்ஜுனா.

இது குறித்து அவர் கூறும்போது, “ஆரம்பத்தில் சில படங்களில் நான் நடித்தாலும் கூட எனக்கு ஏதோ ஒன்று குறைவது போல இருந்தது. அந்த சமயத்தில் தான் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மௌன ராகம் திரைப்படம் பார்த்தேன். எப்படியாவது அவர் டைரக்சனில் நடித்து விட வேண்டும் என திட்டமிட்டு சென்னைக்கு வந்து போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே காத்திருப்பேன்.

அதிகாலையில் அவர் தினசரி நடை பயிற்சிக்காக செல்லும்போது கூடவே சென்று அவரிடம் என்னை வைத்து ஒரு படம் இயக்குங்கள் என்று கோரிக்கை வைப்பேன். ஆரம்பத்தில் என்னிடம் கட் அண்ட் ரைட்டாக பேச முடியாமல் மெதுவாக பேசி என்னை தவிர்க்க நினைத்தார் மணிரத்னம். ஆனால் கிட்டத்தட்ட ஒரு மாதம் அவரை பின் தொடர்ந்ததில் ஒருவழியாக அவர் என்னை வைத்து படம் இயக்க ஒப்புக்கொண்டார்.. அந்த படம் தான் கீதாஞ்சலி. அந்த படம் என் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் ... முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி முதல் இரண்டு பாகங்களைப் போல ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

இளந்திரயன், வேலந்தாவளம் கீதாஞ்சலி தமிழில் இதயத்தை திருடாதே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in