தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

மதராஸி பாடல் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் அனிருத் பேசியதாவது : நானும் சிவகார்த்திகேயனும் ஒன்றாக வளர்ந்தோம். அவரும் நானும் 3 படத்தில் இணைந்தோம். அடுத்து எதிர்நீச்சல். அப்பவே அவருக்கு நல்ல பாடல்கள் அமைந்தது. எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் எஸ் கே. நாங்க இணையும் 8வது படம் மதராஸி. அதேபோல் என்னுடைய 21வயதிலேயே படம் கொடுத்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். அவருடன் இது 3வது படம். இந்த பட பாடல்கள் நன்றாக வந்துள்ளது. இதில் கப்பும் இருக்கிறது. பயரும் இருக்கிறது
அனைத்து படங்களுக்கும் ஒரே மாதிரிதான் இசையமைக்கிறேன். ஒரே மாதிரி உழைப்புதான். இந்த படத்துல வேறமாதிரி நடிச்சு இருக்கிறார் சிவகார்த்திகேயன். நான் ஒரு நாள் பீல்ட் அவுட் ஆகும்போது சிவகார்த்திகேயன் உழைப்பு, வெற்றி, எங்கள் கூட்டணியை நினைச்சு பெருமைப்படுவேன். சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான எதிர்நீச்சல் எனக்கு முதல் பெரிய வெற்றி. அவர் எனக்கு செல்லம். 50 கோடி, 100 கோடி வசூல் தொடங்கி இப்ப 300 கோடிக்கு வந்திட்டாரு.
ஜன நாயகன் படப்பிடிப்பு முடிந்து விட்டது. ஜனவரியில் படம் ரிலீஸ், பாடல்கள் நன்றாக வந்துள்ளது. இது கடைசி படம் என விஜய்சார் சொல்வதால் அவரை மிஸ் பண்ணுவேன். எனக்கு இசை மீது மட்டுமே ஆர்வம், நடிப்பில் அல்ல.
இவ்வாறு அனிருத் பேசினார்.