'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... | மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா |

ஸ்ரீகணேஷ் இயக்கத்தில், சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத் மற்றும் பல நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த படம் '3பிஹெச்கே'. குடும்பப்பாங்கான படமாக அமைந்து இப்படம் ரசிகர்களின் வரவேற்பை ஓரளவிற்குப் பெற்றது.
இப்படத்திற்கு மிகப் பெரும் பிரபலத்திடமிருந்து தற்போது பாராட்டு கிடைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் 'சாட்' செய்தார்.
அப்போது ஒரு ரசிகர், “நீங்கள் எப்போதாவது திரைப்படம் பார்ப்பீர்களா, ஏதாவது பிடித்தது ?,” என்று கேட்டுள்ளார். அதற்கு சச்சின், “எனக்கு நேரம் கிடைக்கும் போது பார்ப்பேன். '3பிஹெச்கே' மற்றும் 'அடா தம்பிச்சா' ஆகிய படங்களை சமீபத்தில் ரசித்துப் பார்த்தேன்,” என பதிலளித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் தமிழ்ப் படங்களையும் பார்க்கும் பழக்கம் உள்ளவர் என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
தங்கள் படத்தை சச்சின் பார்த்தது குறித்து '3பிஹெச்கே' தயாரிப்பாளர் அருண் விஸ்வா, “பல முறை டைப் செய்தும் வார்த்தைகளை கண்டுபிடிக்க முடியவில்லை. நான் சிலவற்றைக் கண்டுபிடித்து பிறகு பதிலளிக்கிறேன். ஏனெனில், நான் இப்போது என் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒன்றைப் பார்த்தேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.