தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

நடிகர் விஷால் தனது நிச்சயதார்த்தம் முடிந்த பின் சென்னை தி நகர் உள்ள நடிகர் சங்கம் புது கட்டட பணிகளை பார்வையிட்டார். அங்குள்ள பிள்ளையார் கோயிலில் வழிபாடு நடத்தினார். பின்னர் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடிவிட்டு அளித்த பேட்டி : இன்று காலை எனக்கும் சாய் தன்ஷிகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நடிகர் சங்க புது கட்டட பணிகள் இன்னும் 2 மாதத்தில் முடியும். அதன் திறப்பு விழா நடந்தபின் அடுத்த முகூர்த்ததில் அடுத்த எங்கள் திருமணம் நடக்கும்.
நானும் தன்சிகாவும் இணைந்து நடித்தது இல்லை. ஆனாலும் நடிகர் சங்கம், அதன் பணிகள் எங்களை சேர்த்து வைத்தது. கடவுள் எனக்கு அனுப்பிய தேவதை அவர். இன்று எங்கள் பெயர் பொறித்த மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் நடந்தது. இத்தனை ஆண்டுகள் வாழ்த்த பேச்சுலர் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. இனி நான் நிறைய மாறுவேன். குறிப்பாக சினிமாவில் முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் என்றார்.
மேலுன் அவர் கூறுகையில், அடுத்த பேச்சிலர் ஆக இருக்கும் சிம்பு, அதர்வா, ஜெய், திரிஷாவுக்கும் நல்ல நேரம் அமைய வேண்டும் என்றார்.