தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

இரவின் நிழல், டீன்ஸ் படங்களை இயக்கிய பார்த்திபன் அடுத்து 3 படங்களில் கவனம் செலுத்துகிறார். இது குறித்து அவரே பேசியுள்ளார். அவர் கூறுகையில், ''அடுத்து ஆண்டாள் என்ற படத்தை இயக்க உள்ளேன். ‛லப்பர் பந்து' சுவாசிகா ஹீரோயின். தலைப்பில் இருந்தே இது ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படம் என தெரியும். டூரிஸ்ட் பேமிலி மாதிரி இது பக்கா குடும்பக்கதை.
அதற்கடுத்து ‛ஆடியன்ஸ்சும் ஆவுடையப்பனும்' என்ற விருது படத்தை இயக்க உள்ளேன். அந்த படத்தின் முயற்சியும், சிங்கிள் ஷாட்டும் பேசப்படும். விரைவில் என் மகன் ராக்கி இயக்குனர் ஆகப்போகிறார். அவன் படத்திலும் ஒரு ரோலில் நடிக்கிறேன். அதில் வடிவேலுவை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது'' என்று கூறியுள்ளார்.
தவிர, சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அர்ஜூன்தாஸை வைத்து படம் இயக்க முயற்சிக்கிறேன் என கூறியுள்ளார். ஆக, அடுத்து 3 படங்களில் பார்த்திபன் தீவிரமாக இருக்கிறார்.