நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
இரவின் நிழல், டீன்ஸ் படங்களை இயக்கிய பார்த்திபன் அடுத்து 3 படங்களில் கவனம் செலுத்துகிறார். இது குறித்து அவரே பேசியுள்ளார். அவர் கூறுகையில், ''அடுத்து ஆண்டாள் என்ற படத்தை இயக்க உள்ளேன். ‛லப்பர் பந்து' சுவாசிகா ஹீரோயின். தலைப்பில் இருந்தே இது ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படம் என தெரியும். டூரிஸ்ட் பேமிலி மாதிரி இது பக்கா குடும்பக்கதை.
அதற்கடுத்து ‛ஆடியன்ஸ்சும் ஆவுடையப்பனும்' என்ற விருது படத்தை இயக்க உள்ளேன். அந்த படத்தின் முயற்சியும், சிங்கிள் ஷாட்டும் பேசப்படும். விரைவில் என் மகன் ராக்கி இயக்குனர் ஆகப்போகிறார். அவன் படத்திலும் ஒரு ரோலில் நடிக்கிறேன். அதில் வடிவேலுவை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது'' என்று கூறியுள்ளார்.
தவிர, சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அர்ஜூன்தாஸை வைத்து படம் இயக்க முயற்சிக்கிறேன் என கூறியுள்ளார். ஆக, அடுத்து 3 படங்களில் பார்த்திபன் தீவிரமாக இருக்கிறார்.