பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
சினிமா தொடங்கிய காலத்தில் வசனங்கள் பாடல்களாகவே இருந்தது. பின்னர் நீட்டி முழக்கி கவிதையாக பேசினார்கள். பின்னர் பக்கம் பக்கமாக பேசினார்கள். பின்னர் சாதாரண தமிழில் பேசினாலும் வளவளவென பேசினார்கள். இந்த பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டு 'நறுக்' வசனங்களால் உருவான படம் 'பகல்நிலவு'.
மணிரத்னம் இயக்கிய முதல் தமிழ் படம். ஊரையே ஏமாற்றி வெளியில் நல்லவன் வேஷம் போடும் வில்லன் சத்யராஜை எதிர்த்து ஹீரோ முரளி மக்களை திரட்டி போராடுகிற சாதாரண கதைதான்.
ஆனால் இளையராஜாவின் இசை, ராமச்சந்திர பாபுவின் ஒளிப்பதிவு, பி.லெனின் எடிட்டிங் இவற்றோடு சேர்ந்து நறுக் வசனமும் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. இதனால் தன்னுடைய எல்லா படத்திலும் நறுக் வசங்களையே பயன்படுத்தினார் மணிரத்னம். 'பொன்னியின் செல்வன்' படத்திற்கு பிறகு இந்த பாணியை மாற்றிக் கொண்டார்.