Advertisement

சிறப்புச்செய்திகள்

பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அதிக வேலையால் வாழ்க்கையை இழந்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை

04 செப், 2025 - 12:34 IST
எழுத்தின் அளவு:
I-lost-my-life-due-to-overwork-A.R.-Rahmans-anguish
Advertisement


இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தில் பிறந்து சர்வதேச அளவில் புகழ்பெற்றார். சினிமாவிற்கு இசை அமைப்பதோடு, இசை நிகழ்ச்சிகள் நடத்துவதோடு, பல ரிக்கார்டிங் ஸ்டூடியோக்களையும் நிர்வகித்து வருகிறார். சொந்த வாழ்க்கையை பொறுத்தவரை அவர் தன் மூத்த மகளுக்கு திருமணம் செய்து வைத்தார், இளைய மகள் சமையல் கலை நிபுணராக உள்ளார். மகன் தந்தையை போல இசை உலகில் இருக்கிறார். மனைவியை பிரிந்தார்.
இந்த நிலையில் அதிக வேலை பளுவின் காரணமாக தன்னால் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியாமல் வாழ்க்கை இழந்து விட்டதாக வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: சில நேரங்களில் பல திட்டங்களை தீட்டி செயல்படுகிறோம். ஆனால் எதிர்பாராத விதமாக அவை முடியாமல் போகலாம். நானும் அப்படித்தான். என்னை பொறுத்தவரை, எதைப்பற்றியும் யோசிக்காமல் காலத்தின் போக்கிலேயே, நதி போல ஓடிக்கொண்டே இருக்கிறேன்.

முன்பெல்லாம் வெறி பிடித்தவன் போல இரவு, பகல் பாராமல் வேலை செய்தேன். அப்படி அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம். அந்தவகையில் இப்போது என் தனிப்பட்ட வாழ்க்கையை அனுபவிக்கவும், குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் நான் வேலைப்பளுவை குறைத்துக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக்: நறுக் வசனத்தில் முதல் படம்பிளாஷ்பேக்: நறுக் வசனத்தில் முதல் ... காதலனுக்காக தயாரிப்பாளரான நடிகை காதலனுக்காக தயாரிப்பாளரான நடிகை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

vijay - coimbatore,இந்தியா
05 செப், 2025 - 05:09 Report Abuse
vijay இளையராஜா சார் கூடத்தான் அவர் பிஸியான இருந்தப்போ இரவு பகல் பாராமல், முக்கியமா நேரத்துக்கு ஸ்டுடியோக்கு போயி வேலை செய்வார். ஒரே நாளில் பல பாடல்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களின் பாடல்களுக்கு மெட்டெழுதி, இசை அமைத்திருக்கிறார். அவரது நூற்றுக்கணக்கான படங்களில் நூற்றுக்கணக்கான பாடல்கள் இன்றும் நினைவில் வச்சு ரசிக்கக்கூடியவை. உமது படங்களில் ஒரு பத்து-பதினைந்து படங்களின் (இந்தியும் சேர்த்து) பாடல்கள் மட்டும்தான் இன்றும் நினைவில் இருக்கும்படி இருக்கும். இளையராஜாவின் மைனஸ்-ஆக அவரது தலைக்குள் கர்வம், திமிர் இருந்தாலும், உள்ளே மசாலாவும் திறமையும் இருந்துச்சு, மத்தவங்களை (உன்னையும் சேர்த்து) நல்லா வேலை வாங்கிருக்கார். அவர் குடும்பத்தில் சில குழந்தைகளினால் பிரச்சினைகள் இருந்தாலும், மனைவி ஜீவாவுடன் கடைசி வரை நல்லபடி வாழவில்லையா?. நீ கீ-போர்டு, கம்ப்யுட்டர் மட்டுமே வச்சு அதன் மூலமாகவே நிறைய பாடல்கள் கொடுக்க ரொம்ப சிரமம் எடுத்து இரவு பகல் பாராமல் வேலை செய்ததினால் வந்த பிரச்சினைதான் உன் மனைவி பிரிந்து சென்றதற்கு காரணம் என்றும் ஊர்-உலகத்தில் மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
Rate this:
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
05 செப், 2025 - 05:09 Report Abuse
என்றும் இந்தியன் அதிக வேலையால் யாரும் வாழ்க்கையை இழக்கமாட்டார்கள். உலகில் உள்ள எல்லா வேலைக்கு செல்பவர்களிடமும் அதிக வேலை தான் இருக்கின்றது. வாழ்க்கையை இழந்தாய் என்றால் அது பணம் பணம் பணம் அதனால் மட்டுமே. பணம் தான் வாழ்க்கையின் இலக்கு என்ற எண்ணம் மனதினில் தோன்றிடில் அப்போது தான் வாழ்க்கையில் இழப்பு ஏற்படும்
Rate this:
Anand - chennai,இந்தியா
05 செப், 2025 - 10:09 Report Abuse
Anand உன்னைவிட பலமடங்கு வேலை பளு உள்ளவர்கள் உலகத்தில் கோடானு கோடி, நீ வாழ்க்கையை இழந்தது வேலை பளுவால் அல்ல. திமிரால்.
Rate this:
Anbilkathiravan - Trichy,இந்தியா
04 செப், 2025 - 07:09 Report Abuse
Anbilkathiravan உண்மைதான். நாம்தான் குடும்பத்திற்காக நேரத்தை திட்டமிட்டு ஒதுக்க வேண்டும்.
Rate this:
MUTHU - Sivakasi,இந்தியா
04 செப், 2025 - 06:09 Report Abuse
MUTHU வேலை என்பதை தன்னுடைய தனிப்பட்ட செயல் என்றும் வாழ்க்கை என்பது வேறு சில பொழுதுபோக்க நிகழ்வுகள் என்று நினைத்ததால் வரும் சலிப்பு. செய்யும் தொழிலே தெய்வம் என்பது living is the very nature of god என்பதை புரியாததால் வந்த கருத்து இது. தெய்வத்துடன் ஒன்றியிருக்க வைத்த மாபெரும் வாய்ப்பு இந்த இசைத்தொழில் என்பதனை புரிந்துகொள்ளவில்லை போலும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in