பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷனை வைத்து தனது முதல் படத்தை இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. தாய்லாந்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் அது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இப்படியான நிலையில் தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு பைனான்ஸ் பிரச்னை காரணமாக நிறுத்தப்பட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த படத்தை இயக்கித் தர, பர்ஸ்ட் காபி அடிப்படையில் 25 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாம் லைகா நிறுவனம். ஆனால் அந்த தொகையை கிளைமாக்ஸை நெருங்குவதற்கு முன்பே முடித்து விட்டாராம் ஜேசன் சஞ்சய். அதனால்தான் படப்பிடிப்பை தற்போது அவர் நிறுத்தி வைத்திருப்பதாக கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்.