தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தெய்வீகமும், தேசியமும் எனது இரு கண்கள் என்ற கொள்கையுடன் வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர் . தென்னிந்திய தலைவர்களில் ஒருவரான அவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் நண்பராகவும் திகழ்ந்தவர்.
அவர் காலத்தில் சினிமா இருந்தது. ஆனால் அவர் சினிமா பார்த்ததில்லை. சினிமா மக்களுக்கு அவசியமில்லாத ஒன்று, இதனால் அவர்களின் உழைப்பும், நேரமும் வீணாவதாக கருதினார். அப்படிப்பட்ட தேவர் பார்த்த ஒரே படம் 'ஔவையார்'.
சந்திரலேகாவைப் போல மற்றொரு பிரமாண்ட படைப்பாக 1953ல் 'ஔவையார்' படத்தை வாசன் தயாரித்தார். ஔவையார் பாத்திரத்தில் பிரபல கர்நாடக சங்கீதப் பாடகியான கே.பி.சுந்தராம்பாள் நடித்தார். தன் வாழ்க்கையில் சினிமாவே பார்த்திராத தேவரை பார்க்க வைத்த படம் ஔவையார். சிவகங்கையிலுள்ள ஶ்ரீராம் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தார். படம் அவருக்கு பிடித்துப்போனதால் இரண்டாவது முறையும் இந்தத் தியேட்டருக்கு வந்து 'ஔவையார்' படத்தை தேவர் ரசித்துப் பார்த்தார். தனது படத்தை 2 முறை பார்த்ததற்காக தேவருக்கு கடிதம் எழுதி நன்றி தெரிவித்தார் வாசன்.