கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

1953ம் ஆண்டு வெளியான படம் 'சண்டிராணி'. பி. பானுமதி இயக்கிய இந்தப் படம் வரலாற்று புனைவு கதையை அடிப்படையாகக் கொண்டது. பரணி பிக்சர்ஸ் பேனரின் கீழ் பி. எஸ். ராமகிருஷ்ணா ராவ் தயாரித்தது.
இந்தப் படத்தின் சிறப்பு என்னவென்றால், இந்த படம் தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. தெலுங்கு மற்றும் தமிழ் பதிப்புகளில் பானுமதி, என். டி. ராமராவ், எஸ். வி. ரங்கா ராவ் மற்றும் ரேலங்கி ஆகியோரும், ஹிந்தி பதிப்பில் ஆகாவும் நடித்தனர். சி. ஆர். சுப்புராமன் மற்றும் எம். எஸ். விஸ்வநாதன் ஆகியோர் இசையமைத்தனர். மூன்று மொழிகளிலும் ஒரே நாளில் வெளியிடப்பட்ட முதல் திரைப்படமும் முதல் பெண் இயக்குனரின் திரைப்படம் இதுவே.
ஒரு நாட்டின் மகாராஜாவை சூழ்ச்சி செய்து வீழ்த்துகிறான், தளபதி. பின்னர் அவனே மன்னர் ஆகிறான். பின்னர் மன்னரின் இரட்டை மகள்களை கொல்ல முயலும் போது மன்னர் மீது விசுவாசம் கொண்ட அமைச்சர் ஒரு மகளை காட்டுக்கு அனுப்பி விடுகிறார், ஒரு மகளை தானே வளர்க்கிறார். இந்நாளில் காட்டுக்குச் சென்ற மகள் எப்படி நாட்டை மீட்கிறார் என்பதே படத்தின் கதை.